சிறப்பு பயிற்றுனர்களின் போராட்டம் : பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கை – நிதியில்லை எனக் கூறி அரசு கைவிரிப்பு - Daily Dhuniya

Latest

Tuesday, January 27, 2026

சிறப்பு பயிற்றுனர்களின் போராட்டம் : பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கை – நிதியில்லை எனக் கூறி அரசு கைவிரிப்பு



சிறப்பு பயிற்றுனர்களின் போராட்டம் : பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கை – நிதியில்லை எனக் கூறி அரசு கைவிரிப்பு

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

போராட்டத்தின் பின்னணி:

சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் சார்பில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக ஜனவரி 21-ஆம் தேதி முதல் சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று (ஆறாம் நாள்) சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

சங்கத்தின் குற்றச்சாட்டு:

இதுகுறித்து, சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் காணிராஜா கூறியதாவது:

தாங்கள் ஆறு நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் தங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு ஊதிய உயர்வு வழங்கியது. தங்களைப் புறக்கணிப்பது வேதனையாக உள்ளது.

பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தியை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கையைத் தெரிவித்தபோது, அவர், "மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதி வழங்கவில்லை. இதனால், உங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் அளவிற்கு அரசிடம் போதிய நிதி இல்லை," எனத் தெரிவித்தார்.

தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என காணிராஜா தெரிவித்தார்

No comments:

Post a Comment